மண் அள்ளும் இயந்திரத்தில் குழந்தைகளை கொண்டு சென்ற தந்தை... இரண்டு உயிர்கள் பலியான சோகம்
அமெரிக்காவில், மண் அள்ளும் இயந்திரத்தில் பிள்ளைகளை ஏற்றிச் சென்றபோது நடந்த ஒரு விபத்தில் இரண்டு பிள்ளைகளை பலிகொடுத்ததோடு சிறைக்கும் செல்கிறார் ஒரு தந்தை.
Roanoke என்ற இடத்தில் மண் அள்ளும் ஜேசிபி இயந்திரம் ஒன்றில் பல சிறுவர்களும், பெரியவர்களும் அமர்ந்திருக்க, விஜேந்தர் சௌகான் (40) என்பவர் அந்த இயந்திரத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அதன் மண் அள்ளும் பகுதியில் விஜேந்தரின் பிள்ளைகள் அமர்ந்திருந்திருக்கிறார்கள்.
அப்போது, என்ன நடந்ததோ தெரியாது, அந்த மண் அள்ளும் பகுதியை கீழே இறக்கியிருக்கிறார் விஜேந்தர்.
அதில் அமர்ந்திருந்த அவரது பிள்ளைகளான ஷிவ்ராஜ் (11) மற்றும் சோனாக்ஷி (7) ஆகியோர் கீழே விழ, வாகனம் அவர்கள் மீது ஏறிவிட்டிருக்கிறது.
இந்த கோர சம்பவத்தில் விஜேந்தரின் பிள்ளைகளான ஷிவ்ராஜ் மற்றும் சோனாக்ஷி இருவருமே உயிரிழந்துவிட்டார்கள்.
மேலும், வாகனத்தில் உட்கார்ந்திருந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெரியவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார்கள்.
விஜேந்தர் மீது இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகள், மூன்று சிறுவர்களுக்கு அபாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கர ஆயுதத்தால் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

