உக்ரைனின் கொடிய தாக்குதல்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்: இருவர் பலி
Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடார் பிராந்தியத்தில் அஃபிப்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து
தெற்கு பகுதியில் இரண்டு எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்போது ட்ரோன் விமானத்தின் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
ரோஸ்டோவ்வில் உள்ள அதிகாரிகள், மற்றொரு தாக்குதலைத் தொடர்ந்து நோவோஷக்தின்ஸ்கி சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாகவும், அதன் சுத்திகரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் இதற்கு முன்னர், ட்ரோன் விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தனது தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கோடையில் பரவலான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |