கொடூரத்தின் உச்சம்... உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: இன்னொரு பகுதியில் பகீர் சம்பவம்
ரஷ்யா மீது இன்னும் கடினமான தடைகளை விதிக்க தவறினால், அது பேரழிவிற்கு இட்டுச்செலும்
பொதுமக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதல்களை ரஷ்யா இதுவரை மறுத்தே வந்துள்ளது.
உக்ரைனின் வடகிழக்கு நகரமான Izium பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் புதைக்கப்பட்ட இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் ரஷ்ய துருப்புகளின் பிடியில் இருந்து உக்ரைன் மீட்டுள்ள இன்னொரு நகரம் Izium. ரஷ்யா மீது இன்னும் கடினமான தடைகளை விதிக்க தவறினால், அது பேரழிவிற்கு இட்டுச்செலும் என்றே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
@Kyiv Independent
ஆனால் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை. மட்டுமின்றி, அப்பாவி பொதுமக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதல்களை ரஷ்யா இதுவரை மறுத்தே வந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளின் கொடூரம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறிய ஜெலென்ஸ்கி, நூற்றுக்கணக்கான மக்கள் புதைக்கப்பட்டுள்ளனர் எனவும், மிகவும் சிறிய நகரமான Izium தொடர்பில் நாம் பேசுகிறோம் என அவர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீதான தடைகள் நீட்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, இது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அந்த நாட்டுக்கு நெருக்கடி அளிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
@New York Times
பல மாதங்களாக நீடித்துவரும் ரஷ்ய படையெடுப்பை அடுத்து, உக்ரேனிய அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் Izium பகுதியில் உள்ள வனப் பகுதியில் ஒரு கல்லறைக்கு அடுத்ததாக ஒரு பெரிய புதைகுழியைக் கண்டுபிடித்தனர், அத்துடன் அவர்கள் இறக்க காரணமான சூழ்நிலைகள் குறித்தும் விசாரணையைத் தொடங்கினர்.
கடந்த வாரம் முடிய, குறித்த குழியில் இருந்து 436 சடலங்களை மீட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் கொடூரமான சாவை எதிர்கொண்டுள்ளனர் எனவும், 30 பேர்கள் கடும் சித்திரவதைக்கு பின்னர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கண்டறிந்தனர்.
மட்டுமின்றி, 17 உக்ரைன் ராணுவ வீரர்களின் சடலங்களும் தொடர்புடைய குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.