ரஷ்யா உக்ரைன் போரில் மேலும் இரண்டு இந்தியர்கள் பலி
ரஷ்யா உக்ரைன் போரில் மேலும் இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ளதாக, இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு வலியுறுத்தல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசு ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தியர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பது இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்துக்கு உகந்தது அல்ல என்றும் கூறியுள்ள இந்திய அரசு, இனியும் இந்தியர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கவேண்டாம் என்றும் ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளது.
நான்கு இந்தியர்கள் பலி
ரஷ்ய உக்ரைன் போரில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களுடைய உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்புமாறு ரஷ்ய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய உக்ரைன் போரில், ஏற்கனவே இந்த ஆண்டில் இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் இருவர் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |