கலிபோர்னியாவில் 6 பெண்கள் உட்பட எட்டு பேர் மரணம்! பனிச்சரிவில் மேலும் இருவருக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் பயங்கர பனிச்சரிவில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் இருவர் இறந்தனர்.
பனிச்சரிவில் 8 பேர்
கலிபோர்னியா-நெவாடா எல்லையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பேர் பெண்கள் ஆவர்.
அப்பெண்களின் அடையாளம் அவர்களது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக பின்னர் தெரிய வந்தது.
உயிரிழந்த 6 பேரும் திருமணமானவர், தாய்மார்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அத்துடன் சியாரா நெவாடா மலைகளின் வனாந்தரத்தில் எப்படி செல்வது என்று தெரிந்தவர்கள் என்று உறவினர்கள் கூறினர்.
மரண ஸ்கை சம்பவங்கள்
இந்த நிலையில், லேக் டஹோவில் மேலும் இரண்டு ஸ்கை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

8 பேர் பலியான சில நாட்களுக்கு பிறகு இத்துயரம் நடந்துள்ளது. டக்ளஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் பிரதிநிதிகள், மவுண்டன் ரிசார்ட்டில் இரண்டு தனித்தனி மரண ஸ்கை சம்பவங்கள் குறித்து தெரிவித்தனர்.
ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று குறிப்பிட்டனர். முதல் சம்பவத்தில் இடைநிலை ஓரியன் பாதையில் 33 வயது நபர் விபத்தில் சிக்கியுள்ளார்.
இரண்டாவது சம்பவத்தில் டமராக் ரிட்டர்ன் பாதையில் 58 வயது நபர் சிக்கியிருக்கிறார். ஆனால், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் அடையாளம் காணப்படவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |