உக்ரைனின் பாக்முட்டில் முன்னேறும் ரஷ்யப்படை: எதிர் தாக்குதலில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ தளபதிகள்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு ரஷ்ய ராணுவ தளபதிகள் உயிரிழந்திருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பாக்முட்டில் முன்னேறும் ரஷ்யப்படை
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா உக்ரைனின் பாக்முட் நகரை கைப்பற்ற போராடி வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை பிரிவினர், தொடர்ந்து பாக்முட் பகுதிகளில் தாக்குதலை நடத்தி முன்னேறி வருகின்றனர்.
@ap
கடந்த 24 மணி நேரமாக பாக்முட்டின் தெற்கு பகுதியில் முன்னேறி வரும் ரஷ்யா படையினருக்கு, எதிராக உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால் இத்தாக்குதலால் ரஷ்யப்படையின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவ தளபதிகள் உயிரிழப்பு
மேலும் இந்த சண்டையில் ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
@ap
ரைபிள் படைப்பிரிவின் தளபதியான வியாசஸ்லாவ் மகரோவ் மற்றும் தனிப்படை பிரிவை சேர்ந்த துணைப்படை தளபதி யெவ்ஜெனி ப்ரோவ்கோ ஆகியோர் உக்ரைன் தாக்குதலை தடுக்கும் முயற்சியில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் குழுமத்தின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், பாக்முட்டில் ரஷ்ய முன்னேற்றத்திற்கு தலைமை தாங்கி வருகிறார், அவர் கடந்த 24 மணி நேரத்தில் தனது படைகள் 130 மீட்டர் (400 அடி) வரை முன்னேறியதாக கூறியுள்ளார்.
@telegram
உக்ரேனியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் தெற்கில் பாக்முட்டில் தாக்குதல்களை நடத்தியதாகவும், ஆனால் அவர்கள் ரஷ்ய பாதுகாப்புகளை உடைக்கவில்லை என்றும் யெவ்ஜெனி பிரிகோஜின் தனது டெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.