முதலில் இதை நிறுத்துங்கள்! வட கொரியாவுக்கு ஐ.நா வலியுறுத்தல்
வட கொரிய எதிர்விளைவு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வடகொரியா மிக நீண்ட தூர ஏவுகணையை ஏவி சோதனை மேற்கொண்டதை ஐ.நா. பொதுச்செயலாளர் Antonio Guterres கண்டித்துள்ளார்.
இதனிடையே, வட கொரியா மேலும் எதிர்விளைவு நடவடிக்கைகளை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று துணை ஐ.நா செய்தித் தொடர்பாளர் Farhan Haq அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
வட கொரியா மிக நீண்ட தூர ஏவுகணை சோதனை மேற்கொண்டது, 2018ல் அந்நாட்டின் மீது விதிக்கப்படட தடையை மீறுவதாகும் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயலாகும்.
சர்வதேச விமானம் அல்லது கடல்சார் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு பரிசீலனையும் வடகொரியா மீண்டும் புறக்கணித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என துணை ஐ.நா. செய்தித் தொடர்பாளர் Farhan Haq தெரிவித்துள்ளார்.