பதிலடி உறுதி... அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுத்த ஹவுதிகள்
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து ஏமனில் ஹவுதிகளின் 36 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பதிலடி உறுதி என ஹவுதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஹவுதிகளின் 36 இலக்குகள்
அமெரிக்க துருப்புகள் மீதான தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையிலேயே அமெரிக்கா ஈராக், சிரியா மற்றும் ஏமன் மீது தாக்குதலை முன்னெடுத்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பிரித்தானியாவுடன் இணைந்து அமெரிக்கா ஹவுதிகளின் 36 இலக்குகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.
@reuters
இந்த தாக்குதலானது ஹவுதிகளின் ஆயுதங்கள் சேமிப்பு கிடங்குகள், ஏவுகணை அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் செங்கடல் வழியே பயணிக்கும் கப்பல் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் பயன்படுத்திய பிற ஆயுதங்களையும் புதைத்துள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஹவுதிகளின் செய்தித்தொடர்பாளர் Yahya Sarea தெரிவிக்கையில், அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த தாக்குதலானது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி என்றார்.
சிரியா மற்றும் ஈராக்கில் சுமார் 85 இலக்குகள்
மேலும், இது மிக மோசமான தாக்குதல் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜோர்தானில் அமெரிக்க துருப்புகள் மீது ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதில் மூவர் பலியானதை அடுத்து, பழிக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஹவுதிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
@reuters
வெள்ளிக்கிழமை சிரியா மற்றும் ஈராக்கில் சுமார் 85 இலக்குகள் மீது முதல் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்தது. இதில் 40 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சிரியா, ஈராக், ஏமன் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை ஆத்திரமூட்ட வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்தின் ஆதரவு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |