ஹமாஸ்-அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம்!
ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ்-அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Is America Losing Trust for Israel (Justifiably So)
— Ryan Rozbiani (@RyanRozbiani) March 5, 2025
The US confirmed it held direct talks with Hamas for the first time since 1997, as mediators push to extend Gaza ceasefire to its second phase.
It appears they are cutting out Israel and doing the deal directly. pic.twitter.com/EAcq4XtypW
மீபத்திய செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், "அமெரிக்கா மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ச்சியான பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன" என்று உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் அரசாங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லெவிட் குறிப்பிட்டார்.
“அமெரிக்க மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, உலக அளவில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை. இது அமெரிக்க மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நல்லெண்ண முயற்சி" என்று லெவிட் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |