6 கோடி ரூபாய்... விமான விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் தொழிலதிபர்
இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியான விடயம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், விமானத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத சிலரும் பலியாகியுள்ள விடயம் கூடுதல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆம், விபத்துக்குள்ளான அந்த விமானம், மருதுவக்கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் ஒன்றின் மீது விழுந்ததில், ஹாஸ்டலில் தங்கியிருந்த நான்கு மருத்துவ மாணவர்களும் பலியானார்கள்.
6 கோடி ரூபாய்...
இந்நிலையில், விமானம் விழுந்ததில் பலியான அந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 6 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளார் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர்.
அவரது பெயர் ஷம்ஷீர் வயலில் (Dr Shamsheer Vayalil). ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலதிபராக உள்ளார் அவர்.
They were future frontline heroes.
— Dr. Shamsheer Vayalil (@drshamsheervp) June 16, 2025
Manav, Aaryan, Rakesh, and Jaiprakash were preparing to save lives, not lose their own. The AI171 crash took them from us. Pledging ₹6 crore to support their families and others affected.#AirIndia171 #AI171 #BJMedicalCollege pic.twitter.com/Jh0vivpstJ
ஷம்ஷீர், சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மானவ், ஆர்யன், ராகேஷ் மற்றும் ஜெய்பிரகாஷ் ஆகிய மாணவர்கள் எதிர்காலத்தில் களத்தில் முன்னணியில் நிற்கவிருந்த ஹீரோக்கள்.
அவர்கள், மற்றவர்களுடைய உயிர்களைக் காப்பாற்றத் தயாராகிக்கொண்டிருந்தவர்கள், அவர்கள் உயிரிழக்க வேண்டியவர்கள் அல்ல.
விமான விபத்து அவர்களை நம்மிடமிருந்து பறித்து விட்டது. ஆகவே, அவர்களுடைய குடும்பங்களுக்கும் அவர்களுடைய மரணங்களால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் உதவுவதற்காக 6 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நானும் மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல்களில் தங்கியவன் என்பதால், வெளியான காட்சிகள் வேதனையை உருவாக்கின.
ஆகவே, மருத்துவம் படித்தும், சேவை செய்யமுடியாமலே போன அந்த மாணவர்களுக்கும், அவர்களுடைய இழப்பால் வாடும் குடும்பங்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் செய்யும் உதவி இது என்றும் கூறியுள்ளார் அவர்.
இந்த ஷம்ஷீர், LuLu Group International நிறுவன உரிமையாளரான யூசுஃப் அலி (MA Yusuff Ali) என்பவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |