சீனாவிடம் கடன் வாங்கிய பிரபல நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலை! இக்கட்டான நிலையில் சிக்கி தவிக்கும் பரிதாபம்
சீனாவிடம் கடன் வாங்கிய உகாண்டா அந்த கடனை திருப்பி தர முடியாமல் திணறி வருவதால், தங்களிடம் இருக்கும் சர்வதேச விமானத்தை சீனா வசம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ல உகாண்டா, கடந்த 2015-ஆம் ஆண்டு சீனாவிடம் 207 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. இதனால் கடனுக்கு ஈடாக உகாண்டாவில் உள்ள எண்டெபெ விமான நிலையம் உள்ளிட்ட சொத்துக்கள் சீனாவிடம் அடமானம் வைக்கப்பட்டது.
தற்போது மிகவும் ஏழ்மையில் இருக்கும் உகாண்டா, கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகிறது. ஒருவேளை கடனை செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒப்பந்தத்தில் உள்ள அந்த விதியை நீக்க வேண்டும் என்று உகாண்டா அரசு சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதனை ஏற்க சீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் உகாண்டாவின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் சீனா வசம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாததால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை உகாண்டா கோர முடியாத நிலையில் உள்ளது.
மேலும், இது குறித்து, உகாண்டாவின் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளரும், ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான சீன டைரக்டர் ஜெனரலிடம் கேட்ட போது, அவர் இந்த தகவலை முற்றிலும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.