16 வயதான மாணவியை திருமணம் செய்து வேறு ஊருக்கு அழைத்து சென்ற 31 வயது ஆசிரியர்! சில மாதங்கள் கழித்து மாணவியை தேடி சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
உகண்டாவில் தன்னிடம் படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புடலஜா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஒமாண்டி (31). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஜான் அதே பள்ளியில் படிக்கும் 16 வயதான மாணவியுடன் நெருங்கி பழகினார். இதையடுத்து மாணவி கர்ப்பமானார்.
பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஜான் அந்த மாணவியுடன் ஊரை விட்டு ஓடிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனி வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் தங்கள் மகள் காணாமல் போனது குறித்து பொலிசில் புகார் கொடுத்தனர்.
புகாரையடுத்து பொலிசார் மாணவியையும் ஜானையும் தேடி வந்த நிலையில் இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோரும் பொலிசாரும் அங்கு சென்ற போது அதிர்ச்சியடைந்தனர்.
காரணம் தங்கள் மகள் கர்ப்பமாக இருந்ததையும் அவர் ஜானுடன் தங்கியிருந்ததையும் கண்கூடாக பார்த்து அவர்கள் அதிர்ந்து போயினர்.
இதையடுத்து மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக ஜானை பொலிசார் கைது செய்துள்ளனர்.