லண்டன் சாலையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு: 2 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்
வடக்கு லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு
வடக்கு லண்டனில் உள்ள டோட்டன்ஹாமில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 17 வயது சிறுவன் டைலர் மெக்டெர்மாட்டின் கொலை செய்யப்பட்டார்.
நார்மன் சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுவன் டைலர் மெக்டெர்மாட்டினை கண்டறிந்தனர்.
பின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், டைலர் மெக்டெர்மாட்டின் மறுநாள்(வெள்ளிக்கிழமை) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இருவர் கைது
இந்நிலையில் சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் 19 வயதுடைய இரண்டு பேரை பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்டர் நீல் ஜான் வழங்கிய தகவலில், இந்த இரண்டு கைதுகளும் எங்கள் விசாரணையின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இருப்பினும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு எனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் தற்போது வடக்கு லண்டன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.