ரஷ்யாவை எதிர்க்க பிரித்தானியா-நேட்டோ படைகள் தயார்: அதிகரிக்கும் ஆயுத மோதல் அபாயம்
ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விமானங்களை எதிர்கொள்ள தயார்
ஐரோப்பாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூயார்க்கின் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பேசிய அவர், நேட்டோ பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழையும் ரஷ்ய விமானங்களுக்கு எதிராக தங்கள் இராணுவ படை உடனடி நடவடிக்கை எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பொறுப்பற்றதாகவும், அபாயகரமானதாகவும் இருப்பதாக கூப்பர் விவரித்துள்ளார்.
ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தொடர் செயல்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான நேரடி ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |