ஹிஸ்புல்லா, ஹமாஸ் நிதியாளர்கள் 2 பேருக்கு பயணத் தடை விதித்த பிரித்தானியா
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு நிதியளிக்கும் இரண்டு பேருக்கு பிரித்தானிய அரசு தடை விதித்துள்ளது.
முஸ்தபா அயாஷ் மற்றும் சந்தேகத்திற்குரிய ஹிஸ்புல்லா நிதியாளர் நசீம் அகமது ஆகியோருக்கு பயணத் தடை விதித்துள்ளதாக பிரித்ததானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை வளர்ப்பதாகவும், ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு நிதியளிப்பதாகவும் கூறப்பட்டதையடுத்து, முன்னதாக இந்த இருவருக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இப்போது, இந்த புதிய தடையின் கீழ் இருவரும் பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது.
பயங்கரவாத நிதியுதவி அச்சுறுத்தல்களில் இருந்து பிரித்தானிய பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பயணக் கட்டுப்பாடுகள் இருக்கும் என பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.
2021-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிக் குழுவுடன் இணைக்கப்பட்ட ஊடக வலையமைப்ற்கு நிதியளித்து ஆதரித்ததற்காக அயாஷ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டார்.
பிரித்தானியாவின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பு அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது.
அதேபோல், ஹிஸ்புல்லாஹ் அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் நசீம் அகமது, 2019-இல் அமெரிக்க பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, ஏப்ரல் 2023-இல் பிரித்தானியாவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டார்.
நசீம் அகமது ஒரு குறிப்பிடத்தக்க கலை சேகரிப்பைக் கொண்டுள்ளார் மற்றும் இங்கிலாந்தில் கலை வணிகத்தை நடத்துகிறார். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட கலைஞர்கள், காட்சியகங்கள் மற்றும் ஏல நிறுவனங்களுடன் ஒத்துழைக்கிறார் என்று பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Bans 2 Hezbollah, Hamas Financiers From Entering Country, United Kingdom news, UK News in Tamil