பிரித்தானியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் தடை - மீறினால்
பிரித்தானியாவில் புதிய தடையொன்று ஜூன் 1 முதல் அமுலுக்கு வருகிறது.
பிரித்தானியாவில் குழந்தைகள் நிகோட்டினுக்கு அடிமையாகும் அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்க்கும் நோக்கத்தில், டிஸ்போஸபிள் வேப்கள் (Disposable Vapes) விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இத்தடை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1 2025) முதல் அமுலுக்கு வருகிறது.
"இந்த புகைக்கும் சாதனங்கள் நம் தெருக்களில் குப்பையாக மாறிவிட்டன, இப்போது அவற்றுக்கு முடிவுக்காலம் வந்துவிட்டது," என அமைச்சர் மேரி கிரேக் கூறினார்.
விதிமீறுவோருக்கு 200 பவுண்டு அபராதம் மற்றும் தொடர்ந்து மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
2021-ல் அறிமுகமான டிஸ்போஸபிள் வேப்கள், வண்ணமயமான தோற்றம் மற்றும் சாக்லேட், மாம்பழம், மின்ட் போன்ற மணமுள்ள வகைகளால் சிறார்களை ஈர்த்தன.
2024-ல் வாரந்தோறும் 50 லட்சம் வேப்புகள் குப்பையாகக் கழிக்கப்பட்டன. அவை வருடத்திற்கு 40 டன் லிதியம் வீணாக்கும் நிலையில் உள்ளது.
இந்த புதிய சட்டம், குழந்தைகளில் வேப்பிங் பழக்கத்தை குறைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. இருப்பினும், இது மறைமுகமாக கறுப்பு சந்தை வளர்ச்சிக்கு வழிவிடும் என்ற அச்சமும் இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK disposable vape ban 2025, UK vape law children health, E-cigarette environmental impact UK, Black market vaping UK, ASH UK vape survey, Vape ban lithium waste, Vaping addiction youth UK, UK smoking alternatives ban, Reusable vs disposable vapes, Vape Club UK response ban