தனது தூதரக அதிகாரிகளை அவசரமாக வெளியேற்றும் பிரித்தானியா: எந்த நாட்டிலிருந்து? ஏன்?
பிரித்தானியா தனது தூதரக அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அவசரமாக உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேற்றத் துவங்கியுள்ளது.
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்குள் ஊடுருவலாம் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை அந்நாட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, தற்போது பிரித்தானியாவும் தனது தூதரக அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அவசரமாக உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேற்றி வருகிறது.
ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 10,000க்கு அதிகமான படையினரைக் குவித்துள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.