சட்டவிரோத புலம்பெயர்தலின் பின்னணியில் புடின்: அதிரவைக்கும் ஒரு தகவல்
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் நுழைவதன் பின்னணியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் இருப்பதாக அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்தலின் பின்னணியில் புடின்
சட்டவிரோத புலம்பெயர்வோருக்குத் தேவையான போலி ஆவணங்கள், அவர்களுடைய போக்குவரத்து மற்றும் ஆட்கடத்தல்காரர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குவதன் மூலம் புடின் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்தலை தூண்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு 18,000 க்கும் மேற்பட்டோர் சிறிய படகுகளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்துள்ள நிலையில், இந்த விடயத்தை தேசிய பாதுகாப்பு நெருக்கடியாக கருத வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிவருகிறார்கள்.
பிரித்தானியாவை பிளவுபடுத்துவதற்காக வெளிநாட்டு சக்திகள் ஆட்கடத்தல் கும்பல்களுக்கு உதவுவதாக பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாதுகாப்புத் துறையைச் சார்ந்த மூத்த அலுவலர் ஒருவர் கூறும்போது, நமக்கு எதிராக செயல்படும் நாடுகள், நமது எல்லைகளை சோதிப்பதற்காகவும், பிரித்தானியாவில் இடையூறையும் நிலையற்ற தன்மையையும் உருவாக்குவதற்காகவும் சட்டவிரோத புலம்பெயர்தலை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |