பிரித்தானியா மக்களை எச்சரிக்கும் போரிஸ்! ஒமைக்ரான் வைரஸ் குறித்து வெளியிட்ட தகவல்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஒமைக்ரான் வைரஸ் நம்மை தாக்காது என்று மக்களை எச்சரித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது வரை 600-க்கும் மேற்பட்ட ஒமைக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளது.
இதனால், அரசு பிளான் பி திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று உள்ளூர் நேரப்படி இரவு 8.00 மணி பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, அவர் இந்த ஒமைக்ரான் வைரஸ் நம்மை பாதிக்காது என்று நினைப்பது மிகவும் தவறு என்று எச்சரித்துள்ளார்.
An update on booster jabs. https://t.co/73NbmmhTiP
— Boris Johnson (@BorisJohnson) December 12, 2021
தொடர்ந்து பேசிய அவர், 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவிற்கான மூன்றாவது, அதாவது பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று உறுதி அளித்தார்.
இது அவர்கள் இரண்டாவது தடுப்பூசி போட்ட மூன்று மாதங்களுக்கு பின் உள்ளவர்களுக்கு என்று குறிப்பிட்டார்.
மேலும், நாம் ஒமைக்ரான் உடனாக போரில் அவசர நிலையில் உள்ளோம். அனைவரையும் பாதுகாக்க தடுப்பூசி என்ற பாதுகாப்பு சுவரை நாம் அவசரமாக வலுப்படுத்த வேண்டும். ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இரட்டிப்பாகி வருகிறது.
இந்த அதிவேக பரவல் எப்படி உருவாகிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எனவே, மக்கள் நம்மை இந்த ஒமைக்ரான் வைரஸ் தாக்காது என்று சாதரணமாக இருக்க வேண்டும்.
இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், இதில் நாம் உறுதியாக சொல்ல முடியாது. அதே சமயம், மூன்றாவது தடுப்பூசி, அதாவது பூஸ்டர் ஊசி, நம்முடைய பாதுகாப்பு நிலையை உயர்த்துகிறது.
இந்த பூஸ்டர் தடுப்பூசிகள் நாளை முதல் பெரியவர்களுக்கும், புதன் கிழமை முதல் இளைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.