பிரித்தானியா சாம்ராஜ்யத்தின் வீர தளபதி விருதுகள் அறிவிப்பு!
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் அஜய் குமார் கக்கர் உட்பட 50 பேருக்கு பிரித்தானியா சாம்ராஜ்யத்தின் வீர தளபதி விருது கொடுக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு கே.பி.இ. - ஓ.பி.இ. விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன் படி, புத்தாண்டு தினமான நேற்று 1,278 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் லண்டன் பல்கலை அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் அஜய் குமார் கக்கர் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுகையில், பிரித்தானியாவில் இந்த உயரிய விருதை பெறுவோர், சமுதாயத்திற்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
இந்திய வம்சாவளியான அஜய் குமார் கக்கர் பல்வேறு அமைப்புகள், அறக்கட்டளைகளில் தலைமைப் பொறுப்பேற்று மருத்துவ துறை வாயிலாக பொது சுகாதாரத்திற்கு சிறந்த சேவையாற்றி வருகிறார்.
நாட்டு மக்களின் நலனுக்கான இந்த அர்ப்பணிப்பு, சீரிய சேவை ஆகியவற்றை கவுரவிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.