இஸ்ரேலில் இருந்து பிரித்தானிய குடிமக்களை வெளியேற்ற சிறப்பு விமானங்கள்: பிரித்தானிய அரசு நடவடிக்கை!
இஸ்ரேலில் இருந்து பிரித்தானிய நாட்டினரை வெளியேற்றுவதற்காக இங்கிலாந்து அரசு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
தீவிரமடைந்து வரும் மோதல்கள் மற்றும் ஈரானின் சமீபத்திய தாக்குதல்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய நாட்டவர்கள் தங்கள் இருப்பைப் பதிவு செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து, வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டவுடன் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
The UK will provide charter flights for British nationals from Tel Aviv when airspace reopens.
— David Lammy (@DavidLammy) June 20, 2025
Register your presence to receive further guidance. Flights will be available based on the level of demand.
The safety of British nationals remains our top priority.
"வேகமாக மாறிவரும்" சூழ்நிலையை இங்கிலாந்து அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இப்பகுதியிலிருந்து போக்குவரத்தை எளிதாக்க இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் இல்லமான நம்பர் 10 இன்று காலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்கள் இரண்டிலும் பிரித்தானிய நாட்டவர்கள் தங்கள் இருப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற தொடர்ச்சியான ஆலோசனையை ஒரு செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.
இந்த பதிவு, வெளியேற்ற விமானங்கள் தொடர்பான மேலதிக வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க உதவும்.
இதற்கிடையில், இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் தற்போது ஜெனீவாவில் உள்ளார். அங்கு, ஈரானின் அப்பாஸ் அராக்க்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் சகாக்களுடன், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவருடன் அவர் சந்திப்பு நடத்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |