பிரித்தானிய சாலையில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பெண் சாரதி கைது
பிரித்தானியாவின் டார்செட்டில் நடந்த வாகன விபத்தில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
பிரித்தானியாவில் கார் விபத்து
டார்செட்டின்(Dorset) கிழக்கு வூடியேட்ஸ்(East Woodyates) பகுதியில் உள்ள A354 சலிஸ்பரி சாலையில்(A354 Salisbury Road) திங்கட்கிழமை இரவு மூன்று வாகன விபத்தில் சிக்கி ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.
மாலை 5:20 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ஹாம்ப்ஷயரில்(Hampshire) இருந்து வந்த ஒரு கிரே சிட்ரோன் DS9 கார்(grey Citroen DS9), வெள்ளை ஃபோர்ட் ட்ரான்சிட் வேன்(white Ford Transit van) மற்றும் டிரெய்லர் இணைக்கப்பட்ட DAF மாட்டு வண்டி(DAF cattle transporter truck) ஆகியவை விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதில் ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த 9 வயது சிறுவன், விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
பெண் ஒருவர் கைது
30 வயதான பெண் ஒருவர் கொலை மற்றும் ஓட்டுநர் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக டார்செட் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்கு முன்னதான நிகழ்வுகளை கவனித்தவர்கள், குறிப்பாக இந்த வாகனங்களில் ஏதேனும் ஒன்றின் "ஓட்டுநர் முறை" பற்றி கவனித்தவர்கள் முன் வந்து தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மாலை 5:20 மணியளவில் A354 சாலையில் பயணித்தவர்களிடம் இருந்து டேஷ் கேம் காட்சிகளை விசாரணை அதிகாரிகள் கோரி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |