பிரித்தானிய பயணிகளுக்காக வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனை
பிரித்தானிய பயணிகளுக்கு புதிய பயண ஆலோசனை ஒன்றை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
புதிய பயண ஆலோசனை
ஹோர்மூஸ் ஜலசந்தியைப் போலவே, ஈரானின் எண்ணெய் அமைப்புக்கு முக்கியமான இடமான Kharg தீவை அமெரிக்கா தாக்கியது மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நகரங்களைத் தாக்குவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது ஆகிய விடயங்களைத் தொடர்ந்து, துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்காக, பிரித்தானியா இந்த புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ள பயண ஆலோசனையில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பயணங்களுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளன.
ஆகவே, பிரித்தானியர்கள், பாதுகாப்பு மற்றும் ராணுவ அமைப்புகள், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அரசு கட்டிடங்களுக்கு அருகே செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான், பொதுமக்கள் நடமாடும் இடங்களான ஹொட்டல்கள், சாலைகள், பாலங்கள், எரிசக்தி அமைப்புகள், எண்ணெய் தயாரிப்பு அமைப்புகள், தண்ணீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் விமான நிலையங்களை தொடர்ந்து தாக்கிவருகிறது.
ஆகவே, பிரித்தானியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக அப்போதைக்கப்போது உலக நடப்புகளை அறிந்துகொள்ளுமாறும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |