பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி: போரிஸ் ஜான்சன் எடுத்த அதிரடி முடிவு! அமைச்சரவை ஒப்புதல்..
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் சமாளிப்பதற்காக அடுத்த 30 ஆண்டுகளில் புதிய தலைமுறை அணு உலைகளை உருவாக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் சில பகுதிகளில் HGV டிரைவர்களின் பற்றாக்குறையால் பெட்ரோல் விநியோகத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
இதனால் நாட்டின் லொறி டிரைவர் பற்றாக்குறையைப் போக்க குறைந்தபட்சம் 5,000 வெளிநாட்டு டிரக்கர்களை ஈர்ப்பதற்காக விசா தேவைகளை எளிதாக்க பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
(Picture: Getty Images)
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் 2050-க்குள் புதிய தலைமுறை அணு உலைகளை உருவாக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
2050-க்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான அரசின் நோக்கத்தையும் கருத்தில்கொண்டு, அணுசக்தியை மையமாகக் கருதும் பிரதமர் ஜான்சனின் இந்த முடிவுக்கு அவை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஸ்புட்னிக்கின் அறிக்கையின்படி, இதற்காக வணிகச் செயலாளர் குவாசி குவார்டெங்வார் (Kwasi Kwarteng), ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார் லிமிடெட் நிறுவனத்திற்கு அணு உலைகள் கட்ட பணம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்களின் படி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2050 வாக்கில், மிட்லாண்ட்ஸ், வட இங்கிலாந்து மற்றும் பிற இடங்களில் குறைந்தபட்சம் 16 அணுசக்தி உலைகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாவதும், அதன்முலம் 40,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை வரவேற்று, "அணுசக்தி ஆலைகள் எதிர்காலத்தில் பிரித்தானியாவின் ஆற்றல் மூலோபாயத்தில் பெரிய பங்கு வகிக்க வேண்டும்" என்று நம்பவதாக நிதி அமைச்சர் ரிஷி சுனக் , சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் கூறியுள்ளார்