தொடர்ந்து வந்த மாதவிடாய்! கர்ப்பமாக இருப்பதை அறியாமலேயே பெற்றோர் கண் எதிரில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி
பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த நிலையில் பெற்றோர் கண் எதிரிலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளர்.
இந்த சம்பவம் கடந்த 2017ல் நடந்த நிலையில் அது குறித்து குழந்தையை பெற்றெடுத்த பெண் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். 15 வயதான அலெக்ஸிஸ் கடந்த 2017ல் பள்ளிக்கூடம் திறந்தபின்னர் முதல் நாள் சென்றிருக்கிறார்.
அங்கிருந்து வீடு திரும்பிய பின்னர் படுக்கைக்கு தூங்க சென்றிருக்கிறார். அப்போது அவர் கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து கத்தினாள். பின்னர் அலெக்ஸிஸ் தூங்க சென்றாள், அடுத்தநாள் காலையில் எழுந்தபின்னர் தனது பெற்றோர் கண் எதிரிலேயே திடீரென அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து அலெக்ஸிஸ் கூறுகையில், நான் கர்ப்பமாக இருந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் எனக்கு தெரியவில்லை. மாதவிடாயும் சரியாகவே வந்து கொண்டிருந்தது, நெஞ்செறிச்சல் மட்டும் இருந்தது, என் வயிறும் பெரிதாக இல்லை.
என் தாயார் கர்ப்பமாக இருந்த போதும் நெஞ்செறிச்சல் இருந்தது, இதனால் சந்தேகமடைந்து கர்ப்ப பரிசோதனை செய்தேன். ஆனால் அதில் நான் கர்ப்பமாக இல்லை என்றே முடிவு வந்தது.
இந்த நிலையில் தான் அன்றைய தினம் காலையில் கழிவறைக்கு செல்ல முயன்ற போது திடீரென குழந்தை பிறந்தது. அப்போது என் தாயாரிடம், நான் குழந்தை பெற்று கொண்டிருக்கிறேன் பாருங்கள் என அதிர்ச்சியுடன் கூறினேன்.
நான் ரகசிய கர்ப்பத்தை அனுபவித்தேன், இதை வழக்கமான மருத்துவ பரிசோதனை முறைகள் கண்டறிய முடியவில்லை என கூறியுள்ளார்.
இதே நிலையில் உள்ள பெரும்பாலான பெண்கள் 20 வது வாரத்திற்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.
அதே சமயம் சில பெண்கள் அவர்கள் பிரசவமாக இருப்பதை குழந்தை பெற்றெடுக்கும் வரையில் கண்டுபிடிக்க முடியாமலும் இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.