புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்தினால் 8,000 பவுண்டுகள்: ஒரு திடுக் தகவல்
பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்துவதற்கே, பிரான்சுக்கு பிரித்தானியா சுமார் 8,000 பவுண்டுகள் வழங்குவதாக திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஒருவருக்கு சுமார் 8,000 பவுண்டுகள்
பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்காக பிரித்தானியா ஆண்டுதோறும் பிரான்ஸ் அரசுக்கு பெரும் தொகை ஒன்றை வழங்கிவருகிறது.

கடந்த ஆண்டு, பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு 175 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் கடந்த ஆண்டில் 22,476 புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்தியுள்ளது.

அப்படியானால், தடுத்து நிறுத்தப்பட்ட ஒவ்வொரு புலம்பெயர்வோருக்காகவும், 7,786 பவுண்டுகள் பிரான்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ள பிரித்தானிய ஊடகங்கள், மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளன.
விடயம் என்னவென்றால், பிரான்சுக்கு இவ்வளவு பணம் கொடுக்கப்படும் நிலையிலும், 41,472 புலம்பெயர்வோர் வெற்றிகரமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |