பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி எம்பி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பி ஷிவானி ராஜா, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயதான ஷிவானி ராஜா, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லண்டன் முன்னாள் துணை மேயர் ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து அவர் வெற்றி பெற்றார்.
லீசெஸ்டர் கிழக்கு இருக்கை உண்மையில் தொழிலாளர் கட்சிக்கு ஒரு முக்கிய இடமாகும்.
ஆனால், ஷிவானி ராஜா மூலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பழமைவாத கட்சி அந்த இடத்தைப் பிடித்தது.
பதவியேற்பு நேரத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது எம்பி ஷிவானி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக உணர்கிறேன் என்று கூறிய அவர்., பிரித்தானிய பேரரசரின் உத்தரவுப்படி செயல்படுவேன் என்று பகவத் கீதை மீது சத்தியம் செய்தார்.
ஷிவானி ராஜா குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் 1970களில் கென்யாவிலிருந்து லெய்செஸ்டருக்கு குடிபெயர்ந்தனர். டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பார்மசி மற்றும் காஸ்மெடிக் சயின்ஸ் முடித்துள்ளார். இங்கிலாந்தில் பல அழகுசாதனப் பிராண்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |