பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மூடுபனி காணப்படுவதையடுத்து, வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானிய சாரதிகளுக்கும் ஒரு எச்சரிக்கை
இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வரும் மூடுபனி, பல மில்லியன் பிரித்தானியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூடுபனி காரணமாக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் எச்சரிக்கை, இன்று காலை 4.00 மணி முதல் 10.00 மணி வரைக்கும் அமுலில் இருக்கும்.
குறிப்பாக, கிழக்கில் Norwich, Cambridge மற்றும் Ipswich ஆகிய பகுதிகள் தொடங்கி Middlesbrough வரை இந்த பாதிப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மறுபக்கத்தில், மான்செஸ்டர், ப்ரெஸ்டன் மற்றும் பிளாக்பூல் ஆகிய பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மூடுபனி காரணமாக வாகனம் ஓட்டும்போது பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் சாரதிகள் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |