போரிஸ் ஜான்சனின் திருமண விழா...இனி அங்கு வைத்து நடைபெறாது: பிரதமர் கூட்டாளி அறிவிப்பு!
பிரித்தானியாவின் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தனது திருமண விழாவை செக்கர்ஸிலிருந்து ஜான்சன் மாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதை தொடர்ந்து, பிரித்தானியாவின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனும் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக வியாழன்கிழமை அறிவித்தார்.
ஆனால் பிரித்தானிய மக்களின் நலன் கருதி அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை தான் பிரதமராக நீடிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது திருமணத்தைக் கொண்டாடுவதற்காக இம்மாத இறுதியில் தனது அதிகாரப்பூர்வ செக்கர்ஸ் நாட்டு இல்லத்தில் விருந்து வைக்கத் திட்டமிட்டிருந்ததால் தான், போரிஸ் ஜான்சன் சில மாதங்கள் தனது பதவியில் தங்க விரும்புகிறார் என கருத்துகள் வெளிவந்தன.
இந்தநிலையில் போரிஸ் ஜான்சனின் கூட்டாளி ஒருவர் தெரிவித்த கருத்தில், ஜான்சனுக்கு வலுவான கடமை உணர்வு உள்ளது, மேலும் புதிய தலைவர் வரும் வரை தனது நாட்டிற்கான சேவையை பிரித்தானியாவிற்கு ஜான்சன் தொடருவார்.
அதேசமயம், போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி ஜான்சனின் திருமண விழா இனி பக்கிங்ஹாம்ஷையரில்(செக்கர்ஸ்ல்) உள்ள பிரதம மந்திரி இல்லத்தில் வைத்து நடைபெறாது என தெரிவித்தார்.
ஜான்சன் கடந்த ஆண்டு 34 வயதான கேரியை, மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் தேவாலயத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் குறைந்த முக்கிய, மற்றும் ரகசிய விழாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆயுதங்கள் சரியான நேரத்திற்கு வந்தால்... உக்ரைன் போர் எப்போது முடிவடையும்: ஜெலென்ஸ்கி தகவல்
இந்த ஜோடியின் திருமண விழா செக்கர்ஸில் ஜூலை 30 அன்று திட்டமிடப்பட்டது இருந்தது குறிப்பிடத்தக்கது.