பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை: கேரளாவை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

London United Kingdom Crime Death
By Thiru Jul 04, 2023 12:43 AM GMT
Report

பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனைவி மற்றும் 2 குழந்தைகள் கொலை

பிரித்தானியாவின் நார்தன்ட்ஸ் பகுதியின் கெட்டரிங் என்ற இடத்தில் (Kettering, Northants) உள்ள வீடு ஒன்றில் மனனவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 52 வயதுடைய கணவர் சஜு செலவலேல் கைது செய்யபட்டு இருந்தார்.

35 வயதுடைய மனைவி அஞ்சு அசோக் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்து இருந்த நிலையில், அவர்களது 6 வயது மகன் ஜீவா சஜு மற்றும்  4 வயது மகள் ஜான்வி சஜு இருவரும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர்.

பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை: கேரளாவை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Uk Kettering Evil Dad Kill His Wife And 2 Children

கெட்டரிங் பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த மனைவி அஞ்சு அசோக் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் சஜு செலவலேல்(Saju Chelavalel) அவரை  கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூன்று பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை: கேரளாவை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Uk Kettering Evil Dad Kill His Wife And 2 ChildrenPA

குறைந்தது 40 ஆண்டுகள் சிறை தண்டனை

  கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு  சென்று சோதனை நடத்திய போது கணவன் சஜு செலவலேல் கையில் கத்தியுடன் தன்னைச் சுட்டுக் கொன்று விடுமாறு பொலிஸாரை வற்புறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை: கேரளாவை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Uk Kettering Evil Dad Kill His Wife And 2 ChildrenPA

இதற்கிடையில் அருகில் உள்ள அறைகளில் இருந்து மனைவி உடல் மற்றும் இரண்டு குழந்தைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணை நார்த்தாம்டன் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மூன்று பேரை கொலை செய்த குற்றம் இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கணவர்  சஜு செலவலேல் மீது சுமத்தப்பட்டது.

பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை: கேரளாவை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Uk Kettering Evil Dad Kill His Wife And 2 ChildrenPA

அத்துடன் அவருக்கு  ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கலாம் என தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் இறுதிவரை மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை எதற்காக கொன்றேன் என்ற காரணத்தை கணவர் சஜூ செலவலேல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US