பிரித்தானியாவில் ஓன்லைன் வயது சரிபார்ப்பை மீறிய குழந்தைகள்., ஆய்வில் அதிர்ச்சி
பிரித்தானியாவில் ஓன்லைன் வயது சரிபார்ப்பை குழந்தைகள் எளிதாக மீறியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், 9 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருபங்கு (32%) பேர் ஓன்லைன் வயது சரிபார்ப்பு முறைகளை கடந்த இரண்டு மாதங்களில் மீறியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதேசமயம், பெற்றோர்களில் 26 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் வயது சரிபார்ப்பை மீற அனுமதித்ததாகவும், சிலர் நேரடியாக உதவியதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு Internet Matters அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. TikTok (34%), YouTube/Google (26%), Roblox (17%) போன்ற தளங்களில் அதிகமாக வயது சரிபார்ப்பு கேட்கப்பட்டதாக குழந்தைகள் தெரிவித்தனர்.

முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் (37%), மூன்றாம் தரப்பு செயலிகள் (24%), அரசு அடையாள அட்டை (22%) போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால், 46 சதவீத குழந்தைகள் வயது சரிபார்ப்பை எளிதில் மீற முடிந்ததாகவும், 13 சத்பவீதம் பேர் போலியான பிறந்த திகதியை, 9 சதவீதம் பேர் மற்றவர்களின் login, 7 சதவீதம் பேர் VPN பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில், 49 சதவீதம் குழந்தைகள் கடந்த மாதத்தில் ஓன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை சந்தித்ததாக கூறியுள்ளனர்.
அதில் வன்முறை, இனவெறி, பாலின பாகுபாடு, தவறான உடல் உருவக் காட்சிகள், தனிப்பட்ட தகவல் கேட்பது, வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
பெற்றோர்களில் 62 சதவீதன் பேர் குழந்தைகள் வயது சரிபார்ப்பை மீறுவதைப் பற்றி கவலைப்பட்டதாகவும், 84 சதவீதம் பேர் குறிப்பாக அசிங்கமான (pornography) உள்ளடக்கங்களுக்கு வயது சரிபார்ப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு, பிரித்தானியாவின் Online Safety Act நடைமுறையில் இருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பு இன்னும் சவாலாகவே உள்ளதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#OnlineSafety #UKSurvey #AgeVerification #ChildSafety #InternetMatters #DigitalSafety #KidsOnline #TechPolicy