சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்., இந்தியர்கள் உட்பட பலர் பாதிப்பு
ஹன்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட கப்பலில் பயணம் செய்யாத பணியாளர்களில் 2 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
அர்ஜென்டினாவின் உஷுவையா துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய நெதர்லாந்தின் MV Hondius என்ற ஆடம்பர சுற்றுலா கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
இதில் 150 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். அதில் இரண்டு இந்தியர்கள் பணியாளர்களாக உள்ளனர்.
இந்த வைரஸ் பரவலால் இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 69 வயது டச்சு பெண், அவரது கணவர் மற்றும் ஜேர்மனி நாட்டு பயணி ஒருவர் அடங்குவர்.
இந்த கப்பல் மே 10-ஆம் திகதி ஸ்பெயின் நாட்டின் கனாரி தீவுகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தின் போது சிலர் சாந்த் ஹெலினா துறைமுகத்தில் இறங்கியதால், அவர்களையும் சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஹன்டா வைரஸ் Covid-19 போல பரவாது. குறிப்பாக “Andes” வகை ஹன்டா வைரஸ் மட்டுமே மனிதர்களிடையே குறைந்த அளவில் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
எனவே உலகளவில் பெரும் அச்சுறுத்தல் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
கப்பலில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கும் மருத்துவர்கள் கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் WHO அறிவுறுத்தியுள்ளது.
இந்தியர்கள் இருப்பதால், இந்திய சுகாதார துறையும் நிலைமையை கவனித்து வருகிறது. உலகளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ள இந்த சம்பவம், ஹன்டா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |