நாட்டை விட்டு வெளியேறவிடாமல் தடுத்த அதிகாரிகள்! கெட்ட வார்த்தை பேசிய வெளிநாட்டு பெண்ணுக்கு துபாயில் கொடுக்கப்பட்ட தண்டனை
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கெட்ட வார்த்தை பேசியதால், துபாயில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்குள்ளாகியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த 31 வயது பெண்(பெயர் வெளியிடவில்லை) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பணிபுரிந்து வருகிறார்.
இவருடன் உக்ரைன் நாட்டை சேர்ந்த வேறு ஒரு பெண் சேர்ந்து தங்கியிருக்கிறார். இந்நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், அந்த ஊரடங்கின் போது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஆகியுள்ளது.
அப்போது இந்த பிரித்தானிய பெண், உக்ரைன் பெண்ணை வாட்சப் மெசேஜில் கெட்ட வார்த்தையால் திட்டியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, அந்த உக்ரைன் பெண் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதன்பிறகு, சொந்த வேலை கிடைத்தபிறகு துபாயை விட்டு வெளியேறி பிரித்தானியாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்த போது, அதிகாரிகள் அவரை துபாயை விட்டு வெளியேற தடை விதித்தனர்.
அப்போது உங்கள் மீது வழக்கு இருப்பதாக கூறி, தடை விதித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கெட்ட வார்த்தையில் திட்டிய குற்றத்துக்காக பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கை வாபஸ் வாங்கும்படி உக்ரைனிய பெண்ணிடம் அவர் கெஞ்சியும், அந்த உக்ரனிய பெண்ணோ வழக்கை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார்.
இதனால், சிறையில் அடைக்கப்பட்ட பெண் கடும் மன உளைச்சலில் தள்ளப்பட்டுள்ளார்.