பாதசாரிகள் மீது காரை ஏற்றிய பிரித்தானியர்...இருவர் பலி, பொலிஸார் தீவிர விசாரணை!
- பிரித்தானியாவில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பாதிப்பு
- சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை
பிரித்தானியாவின் ராம்ஸ்கேட்(Ramsgate) பகுதியில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி வந்த நபர் ஏற்படுத்திய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பாதசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை ராம்ஸ்கேட் பகுதியின் லியோபோல்ட் தெருவில் உள்ள பல மாடி கார் பார்க்கிங்கிற்கு அருகே நடந்து சென்று கொண்டு இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது கார் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் 30 வயதுடைய பெண் மற்றும் 80 வயதுடைய ஆண் என இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதில் ஆரம்ப பள்ளி வயதுடைய சிறுமி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் 40 வயதுடைய ஆண் மற்றும் சிறுவன் என இருவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
கூடுதல் செய்திகளுக்கு: கோவிட் இல்லாத நாடாக வட கொரியாவை அறிவித்தார் ஜிம் ஜாங்: ஆச்சரியமான அதிசயம் என பெருமிதம்
விபத்து இடத்திற்கு வந்த பொலிஸார் ராம்ஸ்கேட்டைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.