லண்டனில் பரபரப்பு! பாலியல் துஷ்பிரயோக வழக்கில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கைது
லண்டனில் பெண் ஒருவரை இரவில் பணியில் இருந்த பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் லண்டனில் இருந்து 29 மைல் தொலைவில் உள்ள Hertfordshire கவுண்ட்டியை சேர்ந்த Stevenage நகரத்தில் டேவிட் கேரிக் (David Carrick) எனும் 46 வயது பொலிஸ் அதிகாரி சனிக்கிஹ்ஸ்மை இரவு கைது செய்யப்பட்டார்.
டேவிட் கேரிக், மெட் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு கட்டளையின் உறுப்பினராக உள்ளார், இது 10 டவுனிங் ஸ்ட்ரீட் உட்பட இங்கிலாந்தின் மிகவும் பாதுகாப்பான கட்டிடங்களை பாதுகாக்கும் ஒரு காவல் பிரிவாகும்.
பெருநகர காவல்துறையில் பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளான டேவிட் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, கிரவுன் பிராசிக்யூஷன் சேவை ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4, 2020 அன்று இரவு பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டேவிட் கேரிக் திங்களன்று ஹாட்ஃபீல்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
அக்டோபர் 2-ஆம் திகதி ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கான்ஸ்டபூலரியால் பிசி டேவிட் கேரிக் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அதே நாளில் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Picture: Reuters
கமிஷனர் டேம் கிரெசிடா டிக் (Dame Cressida Dick) இது குறித்து பேசியபோது "மெட் பாராளுமன்றம் மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இப்போது இந்த கடுமையான குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
பொதுமக்களும் மிகவும் கவலைப்படுவார்கள் என்பதை நான் முழுமையாக அறிவேன். இந்த கிரிமினல் வழக்கு அதன் போக்கில் இருக்கும், எனவே இந்த கட்டத்தில் என்னால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது" என்று கூறினார்.
சாரா எவரார்ட் சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த வழக்கில் சமீபத்தில் குற்றவாளி என நிருபிக்கப்பட்ட மெட்ரோபொலிட்டன் காவல் அதிகாரி Wayne Couzens-க்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கப்பட்டாலும், பிரித்தானிய நகரங்களில் காவல்துறையின் மீது பயம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை சரி செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கமும், காவல் துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த நிலையில், ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான் வழக்கில் மீண்டும் ஒரு பொலிஸ்
அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.