பிரித்தானியாவில் நடந்த பயங்கர விபத்தில் பலியான நபர் யார்? சற்று முன் வெளியான புகைப்படம் மற்றும் விபரம்
பிரித்தானியாவில் வாகனங்கள் மோதிக் கொண்டதில் நடந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில், ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn கிராமத்தில் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு கார்கள் மற்றும் இரண்டு லொரிகள் மோதிக்கொண்ட பெரும் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் இரண்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் Toyota Hilux காரை ஓட்டி வந்த ஓட்டுனர் என்பதும், மற்றொரு ஆண் மற்றும் பெண் இருவரும் Vauxhall Crossland காரில் வந்தவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விபத்து காரணமாக இன்னும் சில காயமடைந்திருப்பதாகவும், 41 வயது மதிக்கத்தக்க லொரி ஓட்டுனர் ஒருவர் இந்த விபத்திற்கு காரணம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காரில் உயிரிழந்த ஓட்டுனரின் பெயர் Paul Mullen என்பது தெரியவந்துள்ளது. 51 வயது மதிக்கத்தக்க இவர் Newcastle அருகே இருக்கும் Washington பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் விபத்தின் போது, Toyota Hilux கார் ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து, Durham பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்து காரணமாக ஆண் மற்றும் பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். லொரி ஒன்று விபத்தால் தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக, பலர் காயமடைந்தனர். 41 வயது மதிக்கத்தக்க லொரி ஓட்டுனர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
விபத்தின் டாஷ்கேம் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.