பிரித்தானியாவின் சமூக கிளப்பில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி! பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவின் கால்பந்து சமூக கிளப்பில் துப்பாக்கிச் சூடு.
எங்கள் தெருக்களில் துப்பாக்கிகளுக்கு இடமில்லை என்று மேற்கு பெல்பாஸ்ட் எம்பி எச்சரிக்கை.
பிரித்தானியாவின் மேற்கு பெல்ஃபாஸ்டில் உள்ள சமூக கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மேற்கு பெல்ஃபாஸ்டில் (west Belfast) உள்ள சமூக கிளப்பில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
SKY
சஃபோல்க் (Suffolk) சாலையில் உள்ள டொனகல் செல்டிக் கால்பந்து கிளப்பில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவசர சேவைகளுக்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் கிளப்பிற்கு வெளியே வரவழைக்கப்பட்டு இருந்தது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேற்கு பெல்ஃபாஸ்ட்டின் எம்பி பால் மாஸ்கி (Paul Maskey)தெரிவித்துள்ள கருத்தில், இன்று டோனகல் செல்டிக் பகுதியில் நடந்த குற்றத்தால் இந்த சமூகத்தில் முழு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
PA
மேலும் இறந்த மனிதரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த எண்ணங்களும் அனுதாபங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதால் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்-க்கு வழங்கப்பட்ட ரகசிய எஸ்டேட்!
அத்துடன் எங்கள் தெருக்களில் துப்பாக்கிகளுக்கு இடமில்லை என்றும் எச்சரித்துள்ளார்.
ALAMY