பிரித்தானிய காவல் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை
டெர்பி காவல்நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்.
ஆயுதம் ஏந்திய பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு.
பிரித்தானியாவின் டெர்பி காவல் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டார்.
டெர்பி (derby) நகர காவல் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை 9:55 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
sky news
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தின் வாகன நிறுத்தும் இடத்திற்கு விரைந்து சென்ற ஆயுதம் ஏந்திய பொலிஸார் மர்ம நபரை உடனடியாக ஆயுதத்தை கீழே போடும் படி உத்தரவிட்டனர்.
பொலிஸாரின் உத்தரவுக்கு ஒத்துழைக்காத அந்த நபரை இறுதியாக காலை 10:03 மணியளவில் ஆயுதமேந்திய பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மர்ம நபர், சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
sky news
கூடுதல் செய்திகளுக்கு: பாபா வாங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு கதறிய ரஷ்ய வீரரின் மனைவி: செய்வதறியாது குழம்பிய கணவன்
காவல் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அந்த மர்ம நபர் எதற்காக கத்தியுடன் சுற்றி திரிந்தார், அவரது விவரங்கள் போன்றவை இன்னும் தெளிவாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
sky news