அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்
அமெரிக்க சுதந்திர தின விழாவில் பங்கேற்க HMS Prince of Wales கப்பலை அனுப்ப பிரித்தானியா யோசனை செய்து வருகிறது.
பிரித்தானிய அரசு, Royal Navy-யின் HMS Prince of Wales விமானம் தாங்கி போர்க் கப்பலை, அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழா (July 4, 2026) நிகழ்வில் பங்கேற்க நியூயார்க் அனுப்பும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், பிரித்தானிய கடற்படையை “பழையது, செயலற்றது” என விமர்சித்துள்ள நிலையில், இந்த முடிவு வருகிறது.
அவர், “பிரித்தானியாவிற்கு உண்மையான கடற்படை இல்லை” எனக் கூறியதோடு, பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை “அவர் ஒன்றும் Winston Churchill அல்ல” என விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அநடத்திவரும் போரில் பிரித்தானியா பங்கேற்க மறுத்ததற்கான எதிர்வினையாக ட்ரம்ப் இந்த விமர்சனங்களை முன்வத்தார்.
இருப்பினும், பிரித்தானிய அரசு, “US-UK special relationship” மற்றும் அரச குடும்பத்தின் மீது ட்ரம்ப் கொண்டுள்ள விருப்பத்தை பயன்படுத்தி, இருதரப்பு உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சி செய்கிறது.
HMS Prince of Wales, 65,000 டன் எடையுடைய விமானம் தாங்கி போர் கப்பலாகும். இது NATO Arctic Circle பயிற்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதால், July 4 நிகழ்வில் பங்கேற்பது பெரும் சவாலாக உள்ளது.
பிரித்தானிய அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் சிலர், “ட்ரம்ப் விமர்சனங்களுக்குப் பிறகு கப்பலை அனுப்புவது அவமானகரமானது” எனக் கூறுகின்றனர். ஆனால், சிலர், “இது தூதரக ரீதியாக முக்கியமான சின்னமாக அமையும்” என வலியுறுத்துகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |