பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் முறைப்படி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியிலிருக்கும் ஒரே நபருக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு
பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமராக பொறுப்பேற்பது தற்போதைய நடைமுறையாக உள்ளது.
அவ்வகையில், ஆளும் லேபர் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளன.

நேற்று, அதாவது, ஜூலை மாதம் 9ஆம் திகதி, லேபர் கட்சித் தலைவருக்கான நாமினேஷன் துவங்கியது.
லேபர் கட்சியின் தலைமைக்கான போட்டியில், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆன்டி பர்னாம் என்பவர் மட்டுமே இருக்கிறார்.
அவருக்கு 322 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவருக்கு 323 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
இதற்கிடையில், லேபர் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பின் முதல் கட்ட வாக்கெடுப்பில் நேற்று தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தாங்கள் நாடாளுமன்றம் வந்ததும், ஆன்டி பர்னாமுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
ஆன்டி பர்னாம் பிரதமராவது எப்போது?
லேபர் கட்சித் தலைவரை நாமினேட் செய்வதற்கான காலகட்டம் ஜூலை 16ஆம் திகதி முடிவடையும் நிலையில், வேறு யாரும் ஆன்டி பர்னாமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்றால், 17ஆம் திகதி நடைபெற இருக்கும் லேபர் கட்சி மாநாட்டில் அவர் லேபர் கட்சியின் தலைவராக பதவியேற்பார்.

லேபர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால், ஆன்டி பர்னாமை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி மன்னர் சார்லசை சந்தித்து, முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்வார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |