பிரித்தானியாவில் கொரோனாவால் 1 கோடிக்கு மேலான மக்கள் பாதிப்பு! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு சமீப நாட்களில் அதிகரித்து வரும் நிலையில், இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, போன்ற நாடுகளில் தீவிரமாக உள்ளது. இதனால் இதைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. அதாவது 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவில் கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து சுமார் 168,000 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், பிரித்தானியாவில் கொரோனாவால் தற்போது வரை 145,000 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன, ஏனெனில், ஆரம்பத்தில் தொற்றுநோய் மற்றும் அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளின் ஆரம்ப கட்டங்களில் சோதனை இல்லாததால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் நம்பப்படுகிறது.
இன்று கொரோனாவால் 47,240 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,021,497-ஐ தொட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் இது ஒரு சிறிய விகிதமாக இருந்தாலும், உலகளவில் அறியப்பட்ட கொரோனா வழக்குகளுடன் ஒப்பிடும் போது, 26-ல் ஒருவருக்கு என்ற பாதிப்பு பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை மதிக்காமல் இருப்பது, டெல்டா மாறுபாடு மற்றும் ஊரடங்கில் அரசின் தாமதம் ஆகியவை தான் என்ற குற்றம் சாட்டப்படுகிறது.