போரிஸ் இதில் உறுதியாக உள்ளார்! உக்ரைன்-ரஷ்யா பிரச்சனை தொடர்பில் பிரித்தானியா முக்கிய அறிவிப்பு
உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர தூதரக முயற்சிகளை துரிதப்படுத்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜானச்ன உறுதியாக உள்ளார் என பிரதமர் அலுவக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் உக்ரைனுக்கு விஜயம் செய்வதன் மூலம் உக்ரைன்-ரஷ்யா பிரச்சனைக்காக தூதரக முயற்சிகளை முடுக்கிவிடுவார்.
தூதரக முயற்சிகளை துரிதப்படுத்த மற்றும் ஐரோப்பாவில் மோதலை தவிர்க்க பாதுகாப்பை அதிகரிக்கவும் பிரதமர் உறுதியாக உள்ளார் .
இந்த வாரம் ஜனாதிபதி புட்டினுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது ரஷ்யா பின்வாங்கி தூதரக ரீதியில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது அல்லது எங்கு பேச்சுவார்த்தை நடக்கும் என்ற விவரங்களை ஜான்சனின் அலுவலகம் தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவுடன் மோதல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் பயிற்சி பணியாளர்களை வழங்கியுள்ளது.
இருப்பினும் போர் படைகளை அனுப்புவது சாத்தியமில்லை என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.