பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்
வரலாற்றில் பிரித்தானிய அரசு செய்த மிகப்பெரிய பாவத்திற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஸ்டார்மர் மன்னிப்பு
பிரித்தானியாவில், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல தசாப்தங்களாக திருமணம் செய்யாத பெண்கள் கட்டாயமாக குழந்தைகளைப் பெற்று தத்தெடுப்பிற்கு ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு, அரசு சார்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

1949 முதல் 1976 வரை, அரசு மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இணைந்து, திருமணம் ஆகாத பெண்கள் சமூக அழுத்தத்தால் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கின. இதனால் சுமார் 1,85,000 குழந்தைகள் தாய்மார்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.
உண்மையில் அரசுக்கு தான் வெட்கக்கேடு...
பிரதமர் ஸ்டார்மர், “இது எங்கள் வரலாற்றில் ஏற்பட்ட களங்கம். அரசின் தவறால் தாய்மார்கள், குழந்தைகள், குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். இதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று பாராளுமன்றத்தில் கூறினார்.
பாதிக்கப்பட்ட தாய்மார்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து பேசிய ஸ்டார்மர், “உங்களுக்கு எந்த அவமானமும் ஏற்படவில்லை. உண்மையில் வெட்கக்கேடு எங்களுக்கே. அரசுக்கும், இதற்கு காரணமானவர்களுக்கும் தான்” என்று கூறினார்.
சமீபத்தில் இங்கிலாந்து தேவாலயம் தங்களது பங்கிற்காக மன்னிப்பு கேட்டது. இதற்கு முன் அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவும் இதேபோன்ற மன்னிப்புகளை கேட்டுள்ளன.
அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தத்தெடுப்பு பதிவுகளை அணுகுவதற்கும், குடும்பங்களை மீண்டும் இணைக்கும் சேவைகளுக்கும், ஆய்வு மற்றும் சான்றுகள் சேகரிக்கும் திட்டங்களுக்கும் 4 மில்லியன் பவுண்டு செலவிட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |