பிரித்தானியா எம்.பி-யை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்! பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டதாக குற்றச்சாட்டு
பிரித்தானியாவில் எம்.பி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அலி ஹர்பி அலி மீது கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வந்ததாக பொலிசார் குற்றச்சாட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து லண்டனைச் சேர்ந்த 25 வயதான அலி ஹர்பி அலி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலைத் தொடர்ந்து சம்பவயிடத்திலே எம்.பி. சர் டேவிட் அமெஸ் உயிரிழந்தார்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட சோமாலியா வம்சாவளியை சேர்ந்த அலி ஹர்பி அலியின் தந்தை, சோமாலியா பிரதமரின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் Harbi Ali Kullane என தெரியவந்தது.
அலி ஹர்பி அலியை கைது செய்து காவலில் எடுத்த பொலிசார், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 21ம் திகதி எம்.பி. சர் டேவிட் அமெஸை கொலை செய்ததற்காகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்ட அலி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அலி இந்த வார இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், மேலும் அடுத்த ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.