மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என பொதுமக்கள் கோஷம்!
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்தடைந்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்.
மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றுகிறார்.
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்தடைந்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார், இதனைத் தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் 12 நாட்களுக்கு துக்க தினம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
SKY NEWS
மேலும் பிரித்தானியாவில் புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் உயிரிழந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் திரண்டு உள்ளனர்.
SKY NEWS
இதேவேளையில் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது துணைவியார் ராணி கமீலா இருவரும் அரச பதவி ஏற்றுக் கொண்டதற்கு பிறகு முதல் முறையாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை தந்தனர்.
அப்போது அரண்மனை வாயில் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்து இருந்த பொதுமக்களை மன்னர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மற்றும் ஆறுதல் வாழ்த்து பெற்றார்.
SKY NEWS
இவ்வாறு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூடியிருந்தவர்கள் மத்தியில் மெதுவாக சென்றபோது மன்னரின் கைகளில் பெண்மணி ஒருவர் முத்தமிட்டார், மற்றொரு பெண்மணி ராஜாவைக் கட்டி பிடித்து முத்தமிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் மன்னர் ஒருவரை வாழ்த்தும் போது ”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” என்று மக்கள் குரல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: குறைந்தபட்ச பெருநிறுவன வரியை செயல்படுத்த தயார்: ஜேர்மன், பிரான்ஸ் நாடுகள் அறிவிப்பு!
SKY NEWS
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தனது முதல் நாடு தழுவிய தொலைக்காட்சி உரையை அரசராக மூன்றாம் சார்லஸ் வழங்க உள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை...”கடவுள் அரசனைக் காப்பாற்றுங்கள்” பொதுமக்கள் கோஷம்!