குறைந்தபட்ச பெருநிறுவன வரியை செயல்படுத்த தயார்: ஜேர்மன், பிரான்ஸ் நாடுகள் அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றியம் முழு அளவிலான ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், குறைந்தபட்ச பெருநிறுவன வரியை சட்டமாக்க ஜேர்மன் தயாராக உள்ளது.
இந்த ஒப்பந்தம் பணவீக்கம் மற்றும் கூட்டணியின் பொருளாதாரத்தை பாதிக்கும் ஹங்கேரி குற்றச்சாட்டு.
பெருநிறுவன வரி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முழு அளவிலான ஒப்பந்ததை எட்டவில்லை என்றால் ஜேர்மன் குறைந்தபட்ச பெருநிறுவன வரியை சட்டமாக்க தயாராக உள்ளது என அந்த நாட்டின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் (படம்) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பாதிப்பு, ரஷ்யா உக்ரைன் இடையிலான போர், தைவான் சீனா இடையிலான போர் பதற்றம் ஆகியவற்றால் உலக பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
EPA
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருநிறுவன வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து வருகிறது.
ஆனால் இது தொடர்பான முடிவை ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை தெரிவிக்காத நிலையில், ஜேர்மன் நிதியமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர்(Christian Lindner), குறைந்தபட்ச பெருநிறுவன வரியை சட்டமாக்க ஜேர்மன் தயாராக இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அத்துடன் நாங்கள் ஐரோப்பிய அணுகுமுறையை வலுவாக ஆதரிக்கிறோம், அனைத்து உறுப்பு நாடுகளையும் குறிப்பாக ஹங்கேரியை இந்த விஷயத்தில் சமாதானப்படுத்த முயற்சிக்கிறோம்.
இருப்பினும் இதைப் பற்றிய ஐரோப்பிய புரிதல் இல்லை என்றால், ஜெர்மனியில் குறைந்தபட்ச கார்ப்பரேஷன் வரிவிதிப்பை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
Credit: iStock Photo
மேலும் இந்த அணுகுமுறை அனைவருக்கும் திறந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் எனவும் லிண்ட்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதைப்போலவே பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் புருனோ லு மைரே (Bruno Le Maire) பரந்த அளவிலான ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், தேசிய சட்டத்தின் மூலம் வரி ஒப்பந்தத்தைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலகின் எனக்கு மிகவும் பிடித்தமானவர் ராணி எலிசபெத்: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்!
இந்த ஒப்பந்தம் பணவீக்கம் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக கூட்டணியின் பொருளாதாரத்தை பாதிக்கும் ஹங்கேரி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.