வின்ட்சர் கோட்டையில் தொடங்கியது ராணியின் இறுதிச் சடங்கிற்கான அணிவகுப்பு பயிற்சி: புகைப்படம்
பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கிற்கான அணிவகுப்பு பயிற்சி தொடங்கியது.
திங்கட்கிழமை வெஸ்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது ராணி இறுதிச் சடங்கு.
திங்கட்கிழமை நடைபெற இருக்கும் ராணியின் அரசு இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் தொடங்கியது.
பிரித்தானியாவை 70 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தனது 96வது வயதில் உயிரிழந்தார்.
PA
மகாராணியின் இறப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை ராணியின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ராணியாரின் பூத உடல் இளவரசர் பிலிப்பிற்கு அடுத்தப்படியாக அடக்கம் செய்யப்பட உள்ளது.
Reuters
இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெறவுள்ள பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு விழாவிற்கான அணிவகுப்பு ஒத்திகைகள் வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் சனிக்கிழமை விடியலுக்கு முந்தியே தொடங்கியுள்ளது.
இதில் இராணுவ இசைக்குழுக்கள் தங்களது அணிவகுப்பு மற்றும் இசைக்கருவிகள் ஆகியவற்றை பயிற்சி செய்து வருகின்றனர்.
sky news
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போர் விரைவில் நிறுத்தப்படும்: ரஷ்ய ஜனாதிபதி புடின் வாக்குறுதி
சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய இந்த பயிற்சி கேம்பிரிட்ஜ் கேட் வழியாக வின்ட்சர் கோட்டையின் மைதான நுழைவுவாயில் வரை செல்கிறது.