பிரித்தானியாவின் பெரும் பணக்கார குடும்பங்கள் மீது வரி: 22 பில்லியன் பவுண்டுகள் திரட்ட திட்டம்
பிரித்தானியாவில் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கும் 350 குடும்பங்களின் சொத்து வரியை அதிகரிக்க நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள்
இதன்மூலமாக ஆண்டுக்கு 22 பில்லியன் பவுண்டுகள் வரையில் திரட்ட முடியும் என நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த தொகையை பயன்படுத்தி ஆண்டுக்கு 145,000 குடியிருப்புகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Photograph: Alex Segre/Alamy
10 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான சொத்துடைய குடும்பங்களுக்கு 2 சதவீதம் வரி விதிக்க நியாயமான வரிவிதிப்பு ஆர்வலர்கள் கோரியுள்ளனர். நார்வே, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தில் இதேபோன்ற சொத்து வரிகள் சமத்துவமின்மையைக் குறைக்க உதவியது மற்றும் அந்த நாடுகளில் உள்ள சில ஏழை மக்களின் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தளர்த்தியது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மேலும், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலான சாதாரண மக்கள் வாழ்க்கை செலவு நெருக்கடியால் திணறும் போது, செல்வந்தர்கள் மேலதிகமாக சொத்துக்களை திரட்டி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, சாதாரண மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி அளவுக்கு பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களுக்கு என செலுத்துவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சொத்துமதிப்பானது 748 பில்லியன் பவுண்டுகள்
பெரும் செல்வந்தர்களிடம் இருந்து உரிய வரியை வசூலித்தால், பொதுச் சேவைகளை சரிசெய்து, குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் வேலை மற்றும் செழிப்பான சுற்றுப்புறங்களை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள 250 பெரும் செல்வந்தர்கள் குடும்பங்களின் மொத்த சொத்துமதிப்பானது 748 பில்லியன் பவுண்டுகள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இவர்களின் சொத்துமதிப்பு 704 பில்லியன் பவுண்டுகள் என இருந்தது.
@getty
மேலும், பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 275வது இடத்தில் உள்ளனர் பிரதமர் சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா குடும்பம். இவர்களின் சொத்துமதிப்பு 529 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு பிரித்தானிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. 2020ல் 147 பேர்கள் பிரித்தானிய கோடீஸ்வரர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 171 என அதிகரித்துள்ளது.
மேலும், சராசரியாக ஒவ்வொருவரின் சொத்துமதிப்பும் 4 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
1990ல் முதல்முறையாக பிரித்தானிய கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியானபோது அதில் 15 பேர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.