பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடந்தால் யார் ஆட்சியை பிடிப்பார்? வெளியான கருத்து கணிப்பு முடிவு
பிரித்தானியாவில் நாளைக்கே பொதுத்தேர்தல் நடந்தால் யார் வெற்றிப்பெறுவார் என்பது குறித்த கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் நாளைக்கு பொதுத்தேர்தல் நடந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என Opinium இணையத்தில் கருத்து கணிப்பு நடத்தியது.
இந்த கருத்து கணிப்பு ஜனவரி 12 முதல் 14ம் திகதி வரை சுமார் 2,005 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.
இதில், 41% பேர் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். 31% பேர் பிரிதமர் போரிஸ் ஜான்சனின் கன்வர்வேடிவ் கட்சிக்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து லிபரல் டெமாக்ராட்ஸ் (9%), SNP (4%), கிரீன் (6%), மற்ற கட்சிகள் (8%) பெற்றுள்ளன.
NEW POLL
— Opinium (@OpiniumResearch) January 15, 2022
The latest @OpiniumResearch / @ObserverUK poll shows a Labour lead of 10 points, up from 5 points a week ago.
Con 31% (-3)
Lab 41% (+2)
Lib Dem 9% (-2)
Green 6% (+1)
Changes on 5-7 January. pic.twitter.com/VrcKvlcYhm
பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 2013க்குப் பிறகு போரிஸ் ஜான்சனின் ஆளும் கன்சர்வேடிவ்களை விட அதன் மிகப்பெரிய முன்னிலையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கின் போது டவுனிங் ஸ்ட்ரீட்டில் சமூகக் கூட்டங்கள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்ததின் விளைவாக, கருத்து கணிப்பில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.