பிரித்தானியாவின் நிலைமை குறித்து வெளிப்படையாக கூறிய அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர்
பிரித்தானியாவில் கொரோனா நிலைமை ‘மிகவும் நிச்சயமற்ற கட்டத்தில்’உள்ளது என்று அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் கொரோனா நிலைமை குறித்து அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் Patrick Vallance கூறியதாவது, இது எந்த திசையில் செல்கிறது என்பதில் கணிசமான நிச்சயமற்ற நிலை உள்ளது.
வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தான் சிறந்தது அல்லது அதனால் பயனில்லை என நினைப்பது தவறு.
நோய் எதிர்ப்பு சக்தி ஒரு வகையான பாதுகாப்பு கேடயமாகும், இது வைரஸின் பரவலைக் குறைக்கும், எனவே எதிர்வரம் வாரங்கள் மற்றும் மாதங்களில் இதை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
Plan B-க்கு அரசாங்கம் முற்றிலும் தயாராக இருக்க வேண்டும். அரசாங்கம் கவனமாக பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது.
ஆனால் கொரோனா அதிகரித்தால் வேகமாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும் என Patrick Vallance கூறியுள்ளார்.